Posts

Showing posts with the label news

நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி

Image
  நாட்டின் 3-வது பெரிய கோடீஸ்வரர் ஆனார் ரோஷினி ரோஷினி அப்பா கணவருடன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவ் நாடார் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவர், எச்சிஎல் கார்ப்பரேஷன் மற்றும் வமா சுந்தரி இன்வெஸ்ட்மென்ட்ஸ் (டெல்லி) ஆகியவற்றில் தன் வசம் உள்ள 51-ல் 47 சதவீத பங்குகளை, தனது ஒரே மகள் ரோஷினி மல்ஹோத்ராவுக்கு (43) பரிசாக வழங்கி உள்ளார்.

அதானி வளர்ச்சி - ஓர் அலசல்

Image
அதானியின் கற்பனையில் உருவான செல்வம் அவரது உண்மையான செல்வத்தை உருவாக்கியது. அதானி தனது பங்கு விலையை முறைகேடான முறையில் உயர்த்தினார், இது அவரது நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை அதிகரித்தது, இது அவரது நிறுவனங்களை பெரிய கடன்களுக்கு தகுதியுடையதாக மாற்றியது. அதானியின் சொத்து அதிகரிப்பை 2014-ல் இருந்து கணக்கிடக்கூடாது, மாறாக நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கபட்ட 13/09/2013 அன்றோ அல்லது மோடி முதல்வர் ஆனதில் இருந்தோ கணக்கிடப்பட வேண்டும். மோடி முதல்வராக பதவியேற்ற நாள் முதல் அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் நாள் வரை அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் சுமார் 85 மடங்கு உயர்ந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 2.65 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் அதானி இந்தியாவில் 22 வது இடத்தில் இருந்தார், மேலும் 2014 ஆம் ஆண்டில் அவர் 7.1 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 11 வது இடத்தைப் பிடித்தார். அவரது அனைத்து நிறுவனங்களின் லாபமும் எகிறவில்லை, ஆனால் பங்குகளின் விலை உயர்ந்துவிட்டன, இது நிறுவனத்தின் மதிப்பீட்டின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது நிறுவனங்களுக்கு லாபத்திற்...

MEME SEP 3 23

Image
  சட்டம் தன் கடமையை செய்யும் (மா?)

இந்துத்துவம்

Image
  ஈழப்போரில் இறந்தவர்களில் அதிகம் இந்துக்கள் தான் இதை எந்த இந்துத்துவா காவலர்களும் தடுக்கவில்லை மாறாக படுகொலைக்கு காரணமானவர்களுக்க ஆதரவாகவே இருந்துள்ளனர். இந்துக்கள் இல்லை என்றால் இந்துமதம் இருக்க முடியாது தமிழர்கள் பின்பற்றும் இந்துமதம் இந்துத்துவா வாதிகளை நம்பி ஒருபோதும் இருந்ததில்லை.

சிப்பாய் புரட்சி

1805இல், வேலூர் கோட்டையில் சிப்பாய் புரட்சி நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும். ஏன் நடந்தது என்று தெரியுமா? 1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது.  இதை படிக்கும்போது, முஸ்லீம் மாணவர்கள் ஹிபாப் பிரச்சனை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.  நம்புங்க. அது வேற, இது வேற.  #historyrepeats  

ஜப்பான் மட்டும் இல்லையென்றால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இருக்காது

Image
 1944-ம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நேச நாடுகளின் கூட்டுப்படைகளைச் சிதறவிட்டு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளின் கைகள் ஓங்கியிருந்த சமயம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தோடு 15000 ஜப்பானியர்களும் இந்திய எல்லையில் போரை துவங்கினார். உலகப்போரில் பிரிட்டிஷ் இந்தியப் படைப்பிரிவில் இருக்கும் இந்திய வீரர்களை ஈடுபடுத்திக்கொள்ள நினைத்தது பிரிட்டன் . ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த காந்தி, தனது பாசிச எதிர்ப்புக் கொள்கையால் சம்மதம் தெரிவித்தார். ஆனால், நேதாஜி உள்ளிட்ட வேறு சில தலைவர்களும் இதனை கடுமையாக எதிர்த்தனர். இதனால் நேதாஜி சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய நேதாஜி பிரிட்டனின் எதிரி நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற அச்சு நாடுகளுடன் கூட்டுசேர்ந்து, அவற்றின் உதவியோடு பிரிட்டிஷ் அரசை வீழ்த்தி, சுதந்திர இந்தியாவை மீட்டெடுக்கவேண்டும் எனத் திட்டமிட்டார். ஜெர்மனி சென்று ஹிட்லரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் அங்கிருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்றவர், ஜெர்மனியின் கூட்டாளியான ஜப்பானுடன் கைக்கோர்த்த...