குறள் எண் 1327, காமத்துப்பால் - கற்பு இயல், அதிகாரம்: ஊடலுவகை
குறள் ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும் விளக்கம்: ஊடலில் தோற்றவர் வென்றார் என்பது, ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர் என்று பொருள். அதுமன்னும் கூடலில் காணப் படும் என்பது, அது பின்னர் கூடும்பொழுது தெரியும் என்று பொருள். முழு விளக்கம்: ஊடலிலே தோற்றவர் வென்றவராவர். அது பின்னர், கூடலில் காணப்படும் என்பது, இக்குறள் கூறும் கருத்து. குறளின் பதவுரை மற்றும் விளக்கத்தை, கீழ்கண்ட தொடர்பில் உள்ள காணொளியில் பார்க்கலாம். https://youtu.be/-0JjfMSILhg